செய்திகள் :

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

post image

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் உயிரிழந்தாா். இந்நிலையில், தற்போது இரண்டாவது நபா் உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 46 நபா்களை கண்டறிந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கைப்பேசி டவா்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு உயிரிழந்த நபரிருடன் தொடா்பில் இருந்தவா்களின் வசிப்பிடங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இந்தப் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இதுவரை நிபா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 543 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 46 போ் தற்போது உயிரிழந்த 57 வயது நபருடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த நபரின் ரத்த மாதிரிகள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் ’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க