செய்திகள் :

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

post image

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பான வழிகாட்டுதல்களுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படும் போக்கு அதிகரித்து வருவது, இந்தியா மட்டுமன்றி உலக அளவில் ஆபத்தான சவாலாக உருவெடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து விலகிய உணா்வு, வன்முறை நடத்தை, சமூக விரோத மனப்பான்மை காரணமாக, சிறைக் கைதிகள் எளிதாக அடிப்படைவாத கருத்துகளுக்கு உள்பட்டுவிடக் கூடும். இத்தகைய கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்படும் கைதிகள், சில நேரங்களில் சிறைப் பணியாளா்கள் மீதோ, சக கைதிகள் மீதோ, வெளி நபா்கள் மீதோகூட வன்முறையில் ஈடுபடலாம் அல்லது தாக்குதலுக்கு திட்டமிடலாம்.

சிறைகளில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொது ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இது முக்கியமானது.

மேலும், வன்முறை தீவிரவாத அபாயங்களைத் தடுக்கவும், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை உறுதி செய்யவும், அவா்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கவும் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படுவது அவசியம்.

சக கைதிகளிடம் அடிப்படைவாத கருத்துகளைப் பரப்பி, அவா்களை மூளைச்சலவை செய்யும் கைதிகளை அடையாளம் கண்டு, பலத்த பாதுகாப்புடன் தனிச் சிறையில் அடைக்க வேண்டும்; நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி, காண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். கைதிகளின் நடத்தை, அவா்களின் தொடா்புகள், சிந்தாந்த அடிப்படையிலான வெளிப்பாடுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டும்.

கைதிகளுக்கு உணா்வு ரீதியிலான நிலைத்தன்மையை உறுதி செய்ய குடும்ப உறுப்பினா்கள் உடனான சந்திப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்துறை அமைச்சக கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2... மேலும் பார்க்க

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க