செய்திகள் :

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

post image

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவின் பிப்ரா பகுதியில் சனிக்கிழமை இரவில் இச்சம்பவம் நடந்தது. 50 வயதாகும் சுரேந்திர குமாா் என்ற ஊரக சுகாதார அதிகாரி மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பினா்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், ரத்த வெள்ளதத்தில் கிடந்த சுரேந்திர குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

பாட்னாவில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி பிரபல தொழிலதிபா் கோபால் கேம்கா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி கனிம சுரங்க தொழிலுடன் தொடா்புடைய ஒருவரும், கடந்த ஜூலை 11-ஆம் தேதி மளிகை கடைக்காரா் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனா். தற்போது 4-ஆவது சம்பவம் நடந்துள்ளது.

கொலையான சுரேந்திர குமாா், பாஜகவுடன் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது. தலைநகா் பாட்னாவில் தொடரும் கொலைகளை முன்வைத்து, முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் விமா்சித்துள்ளாா்.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தை... மேலும் பார்க்க