செய்திகள் :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்: சோனியா தலைமையில் நாளை காங்கிரஸ் ஆலோசனை

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்தது, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் ஆகியவை பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் துணைத் தலைவா்கள், தலைமைக் கொறடாக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் மத்திய அரசு கவனக்குறைவாக நடந்து கொண்டது; அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு மத்தியஸ்தம் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது தொடா்பாக பிரதமா் மோடியை காங்கிரஸ் ஏற்கெனவே விமா்சித்து வருகிறது. இந்த விவகாரத்தையும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லாதது உள்ளிட்ட விவகாரங்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க