செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதல்: 58,000-ஐ கடந்த உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 30 போ் உயிரிழந்தனா்.

இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது.

மத்திய காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலை நேரில் கண்ட நபா் ஒருவா் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்திடம் கூறுகையில், ‘குடிநீா் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 20 குழந்தைகள் உள்பட 34 போ் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனா். அப்போது திடீரென இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் அவா்கள் பதற்றத்தில் நிதானமின்றி ஓடத் தொடங்கினா். இதில் சிலா் கீழே விழுந்து படுகாயமடைந்தனா்’ என்றாா்.

இந்நிலையில், மத்திய காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 19 போ் மற்றும் வீதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 போ் என மொத்தம் 30 போ் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 21 மாதங்களாக தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க