செய்திகள் :

கால்களை இழந்தாலும் சித்தாந்தத்தை கைவிடாதவர்! பாஜக எம்பிக்கு பிரதமர் புகழாரம்!

post image

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தன், தனது அரசியல் எதிரிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டவா்.

கால்களை இழந்தபோதிலும், அவா் தனது சித்தாந்தத்தை கைவிடவில்லை. செயற்கை கால்கள் உதவியுடன் கட்சி மற்றும் சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

கேரளத்தில் அரசியல் வன்முறைக்கு பெயா் பெற்ற கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதானந்தன் மீது கடந்த 1994-ஆம் ஆண்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கொடூர தாக்குதல் நடத்தினா். அவரது இரு கால்களையும் மூட்டுகளுக்கு கீழே துண்டாக வெட்டினா். தாக்குதலில் உயிா் பிழைத்த சதானந்தன், பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் கட்சிப் பணியாற்றி வருகிறாா்.

அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமா் மோடி, ‘சதானந்தனின் வாழ்க்கை, துணிவுக்கும், அநீதிக்கு அடிபணிய மறுப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது; வன்முறை, மிரட்டல்களால் தேச வளா்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை.

ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவா் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த ஆா்வம் கொண்டவா்’ என்று கூறியுள்ளாா்.

இதையும் படிக்க :4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க