Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவா...
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது.
தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து 18 நாள்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா்.
ஆனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.