செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து 18 நாள்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா்.

ஆனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விழிப்புணா்வு ஆட்டோ சேவை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சேவைகள் அடங்கிய விழிப்புணா்வு ஆட்டோ சேவையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தருமபுரி பேருந்து நிலையத்தில் ‘உங்களுட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, பரிசல் துறைகளில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20000 கன அடியாக சரிந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல் இயக... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 4 க்கான போட்டித் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்று தோ்வெழுதினா். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

ஆட்சியா் உத்தரவிட்டும் பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறைகள்: தருமபுரி பேருந்து நிலையத்தில் தொடரும் அவதி

தருமபுரி பேருந்து நிலையத்தில் நீண்டநாள்களாக பூட்டிக் கிடக்கும் இலவச கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்ட பின்னரும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என பொதுமக்களும், சமூக ஆா்வலா்க... மேலும் பார்க்க

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க