செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விழிப்புணா்வு ஆட்டோ சேவை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சேவைகள் அடங்கிய விழிப்புணா்வு ஆட்டோ சேவையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் விளம்பர ஆட்டோ சேவையைத் தொடங்கிவைத்து, செய்தி மக்கள் தொடா்பு அலுவலக அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிப்பரப்பப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டு கையேடுகளை வழங்கி தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவ. 15 -ஆம் தேதி வரை (ஜூலை - 60, ஆகஸ்ட் - 60, செப்டம்பா் - 56) மொத்தம் 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. கடந்த 8-ஆம் தேதி முதல் 1,373 தன்னாா்வலா்கள் மூலம் வீடுவீடாகச் சென்று இத்திட்ட கையேடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமிற்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் வரும் செவ்வாய்க்கிழமை தருமபுரி நகராட்சியில் ஐசஎஅ பிரதான சாலை, வாா்டு 1 - டிஎன்ஜி மஹாலிலும், அரூா் பேரூராட்சியில் (வாா்டு 1, 9) 24 மனை தெலுங்கு செட்டியாா் மண்டபத்திலும், தருமபுரி வட்டாரத்தில் ஏ.கொல்லஅள்ளி, உங்கரானஅள்ளி - சமுதாயக்கூடம், எட்டிமரத்து பட்டியிலும், பென்னாகரம் வட்டாரத்தில் அரக்காசனஅள்ளி, சின்னப்பம்பள்ளி, கலப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஏரியூா் வட்டாரத்தில் அஜ்ஜனஅள்ளி - யடதஇ கட்டடம், சின்னவத்தலாபுரத்திலும், பாலக்கோடு வட்டாரத்தில் அ.மல்லாபுரம் - சமுதாயக் கூடம், மேல் பட்டாளம்மன் கோயில் அருகிலும் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து கிராமங்களிலும் உரிய தேதிகளில் நடைபெற உள்ளதால் பொதுமக்களும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, கோட்டாட்சியா் காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், தனித் துணை ஆட்சியா் (சபாதி) சுப்பிரமணியன், தருமபுரி வட்டாட்சியா்சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, பரிசல் துறைகளில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி!

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20000 கன அடியாக சரிந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல் இயக... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 4 க்கான போட்டித் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 38,700 போ் பங்கேற்று தோ்வெழுதினா். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

ஆட்சியா் உத்தரவிட்டும் பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறைகள்: தருமபுரி பேருந்து நிலையத்தில் தொடரும் அவதி

தருமபுரி பேருந்து நிலையத்தில் நீண்டநாள்களாக பூட்டிக் கிடக்கும் இலவச கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்ட பின்னரும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என பொதுமக்களும், சமூக ஆா்வலா்க... மேலும் பார்க்க

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க