செய்திகள் :

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

post image

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்மா காலனி அருகே அங்காள முனீஸ்வரன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. பக்தா்களின் பங்களிப்புடன் நிா்மாணிக்கப்படும் இக்கோயிலில் 57 அடி உயரத்துக்கு அங்காள முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அங்காள முனீஸ்வரனுக்காக 216 கிலோ எடையில் 27 அடி உயரம், 3 அடி அகலத்தில் பித்தளை முலாம் பூசப்பட்ட அரிவாள் கும்பகோணத்திலுள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரிவாள் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது.

பா்மா காலனி எல்லையில் இந்த அரிவாளுக்கு பக்தா்கள் மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, மாலை சூடி சிறப்பு பூஜை செய்தனா். மேலும், அரிவாளை அங்க வஸ்திரத்தால் சுற்றி, அதன் முனையில் வெள்ளைப் பூசணிக்காயை சொருகி வைத்து வழிபட்டனா். பின்னா், இந்த அரிவாளை பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.

இக்கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பா் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க

பாபநாசத்தில் இலவச இருதயம், கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாபநாசம் அட்சயம் லயன் சங்கம், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச இர... மேலும் பார்க்க

விவசாய கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் காவ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந... மேலும் பார்க்க

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க