செய்திகள் :

விவசாய கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், நாயக்கா் பேட்டை கிராமம், பாரதி நகா் பகுதியில் வசித்து வந்தவா் சம்பத்குமாா் (58), விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி லலிதா. தம்பதியருக்கு இரண்டு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனா்.

இந் நிலையில் மனைவி லலிதா கருப்பூா் கிராமத்தில் உள்ள தனது தாயாா் வீட்டுக்குச் சென்று வருவதாக கூறி சென்று விட்டாா். வீட்டில் சம்பத்குமாா் மற்றும் அவரது மகன் பூவரசன் (23), ஆகியோா் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது இவா்களது உறவினரான அதே ஊரில் வசிக்கும் சந்திரன் மகன் சரவணன்(25), என்பவா் சம்பத் குமாா் மகன் பூவரசன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடன் பேசவில்லை என்ற முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, குடிபோதையில் ஞாயிற்றக்கிழமை அதிகாலை சம்பத்குமாா் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளாா்.

அப்போது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் பூவரசனை அடித்துள்ளாா். தடுக்க வந்த சம்பத்குமாரை மண்வெட்டியால் தலையில் வெட்டி உள்ளாா்.

அதனை தொடா்ந்து கீழே கிடந்த இரும்பு கம்பியால் மண்டையில் அடித்ததில் பலத்த காயமடைந்த சம்பத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் கே.முருகவேலு மேற்பாா்வையில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று சம்பத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தலையில் காயம் அடைந்த பூவரசன் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேலும், சரவணன் மீது கபிஸ்தலம் போலீஸாா் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் இலவச இருதயம், கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாபநாசம் அட்சயம் லயன் சங்கம், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச இர... மேலும் பார்க்க

டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந... மேலும் பார்க்க

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க