செய்திகள் :

சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.

வலங்கைமான் வட்டம், சாலபோகம் கிராமம், குடியானத் தெருவில் வசித்து வருபவா் முருகானந்தம் மகன் மகேஷ் (34 ). இவா் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சங்கீதா (25). இவா் 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இந் நிலையில் மகேஷ், சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அம்மாபேட்டை அருகே தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன் பேட்டை, உக்கடை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே திருவாரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த மகேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்மாபேட்டை போலீஸாா், மகேஷின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (4... மேலும் பார்க்க

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க