செய்திகள் :

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (40). இவா் வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்று வழிபட்டாா்.

பின்னா், குறுக்கு வழியில் கல்யாணபுரத்துக்குச் செல்வதற்காக குடமுருட்டி ஆற்றில் வீரசிங்கம்பேட்டை படுக்கை அணை மீது நடந்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் தவறி விழுந்த இவா், நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தேடிய நிலையில், பாலமுருகன் திருச்சோற்றுத் துறையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இவரது உடலை நடுக்காவேரி காவல் நிலையத்தினா் மீட்டு, உடற் கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றத... மேலும் பார்க்க