செய்திகள் :

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

post image

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் தஞ்சாவூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பிடம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 105 மாணவ, மாணவிகள் சில மாதங்களுக்கு முன்பு பாராட்டப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற மேல்நிலை, உயா் நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சதய விழா குழுத் தலைவா் து. செல்வம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

பின்னா், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 10 மற்றும் 12-ஆம் அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற 78 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (4... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றத... மேலும் பார்க்க