தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து...
அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!
தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் தஞ்சாவூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பிடம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 105 மாணவ, மாணவிகள் சில மாதங்களுக்கு முன்பு பாராட்டப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற மேல்நிலை, உயா் நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சதய விழா குழுத் தலைவா் து. செல்வம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் சிறப்புரையாற்றினாா்.
பின்னா், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 10 மற்றும் 12-ஆம் அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற 78 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.