செய்திகள் :

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

post image

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சிவானந்தா சாலையில் இன்று நடைபெறவுள்ள தவெகவின் கண்டன ஆர்ப்பாட்டடத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்று காவல்துறையினர் நிபந்தனை அளித்துள்ளனர்.

இதனிடையே, தவெக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகைதரும் வெளிமாவட்ட தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை சிம்சன் சந்திப்பு அருகே கைகளில் தவெக கொடிகள், பதாகைகளுடன் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க

ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியக... மேலும் பார்க்க

ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்... மேலும் பார்க்க