செய்திகள் :

ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

post image

அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இதே ஊரைச் சேர்ந்த கோபியின் மகன் மோனி பிரசாத்(9), அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி புஜன் (7) அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மூன்று சிறுவர்களும் குன்னத்தூர் ஏரியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய சிறுவர்களை கிராமத்தினர் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவருமே இறந்து விட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

மூன்று பேரின் சடலங்களும் உடற்கூறு பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பலியான நிலையில், குறிப்பாக ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The incident in which three children drowned while playing in a lake near Arakkonam has caused sadness among the people of Mettu Kunnathur village.

இதையும் படிக்க: டேங்கர் ரயில் தீவிபத்து! முழுவதுமாக அணைக்கப்பட்டது!

இரவில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு : ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அதாவது (186 அடி அளவு) நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தெரிவித்தார்.ஈரோட்டில் உள்ள திண... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும்- தமிழிசை விமர்சனம்

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களை பாதிக்கும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ ... மேலும் பார்க்க

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ... மேலும் பார்க்க

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க