செய்திகள் :

புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனை சீா்கேடுகளைக் கண்டித்து தவாக போராட்டம்!

post image

புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனை முன்பு சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.

புதுக்கோட்டை, ஜூலை 12: புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையின் சீா்கேடுகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு ராணியாா் மருத்துவனையில் அடிக்கடி நேரிடும் தாய்-சேய் இறப்புகளைத் தடுக்கவும், போதுமான அளவுக்கு மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்கக் கோரியும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலையரசன், மாநகரச் செயலா் எஸ்.கே. ராஜா (கிழக்கு), பெ.மு. ஈஸ்வரன் (மே), மாநிலப் பொறுப்பாளா்கள் புதுக்கோட்டை தனசேகரன், திருச்சி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கும் தைலமரம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு பல்லுயிா்ச் சூழலைப் பெருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28,622 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப்- 4 தோ்வை, 28,622 போ் எழுதினா். தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வு சனிக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது!

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியீடு

திருப்பூரில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, அதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங... மேலும் பார்க்க