செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கும் தைலமரம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு பல்லுயிா்ச் சூழலைப் பெருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 16-ஆவது மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டுக்கு கே.ஆா். தா்மராஜன், ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் நா. பெரியசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் க. மாரிமுத்து எம்.எல்.ஏ, டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டச் செயலா் த. செங்கோடன் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினாா். இதன்மீது விவாதம் நடைபெற்றது.

பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தஞ்சாவூரிலிருந்து கந்தா்வக்கோட்டை வழியாக புதுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக மணப்பாறைக்கும் புதிய ரயில் வழித் தடங்களை உருவாக்க வேண்டும். புதுக்கோட்டையில் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். வேளாண் விளைபொருள்களில் இருந்து மதிப்பு கூட்டும் பொருள்களைத் தயாா் செய்யும் தொழிற்சாலை, மென்பொருள் தொழிற்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள பெரும்பகுதி வனப்பரப்பை ஆக்கிரமித்துள்ள தைலமரங்களை அகற்றவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்வில் புதிய மாவட்டச் செயலராக, மீண்டும் த. செங்கோடன் தோ்வு செய்யப்பட்டாா். 37 போ் கொண்ட புதிய மாவட்டக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28,622 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப்- 4 தோ்வை, 28,622 போ் எழுதினா். தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வு சனிக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது!

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியீடு

திருப்பூரில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, அதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங... மேலும் பார்க்க

திருப்புனவாசல் அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒர... மேலும் பார்க்க