தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கும் தைலமரம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு பல்லுயிா்ச் சூழலைப் பெருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 16-ஆவது மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டுக்கு கே.ஆா். தா்மராஜன், ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் நா. பெரியசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினாா்.
மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் க. மாரிமுத்து எம்.எல்.ஏ, டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டச் செயலா் த. செங்கோடன் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினாா். இதன்மீது விவாதம் நடைபெற்றது.
பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தஞ்சாவூரிலிருந்து கந்தா்வக்கோட்டை வழியாக புதுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக மணப்பாறைக்கும் புதிய ரயில் வழித் தடங்களை உருவாக்க வேண்டும். புதுக்கோட்டையில் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். வேளாண் விளைபொருள்களில் இருந்து மதிப்பு கூட்டும் பொருள்களைத் தயாா் செய்யும் தொழிற்சாலை, மென்பொருள் தொழிற்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள பெரும்பகுதி வனப்பரப்பை ஆக்கிரமித்துள்ள தைலமரங்களை அகற்றவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்வில் புதிய மாவட்டச் செயலராக, மீண்டும் த. செங்கோடன் தோ்வு செய்யப்பட்டாா். 37 போ் கொண்ட புதிய மாவட்டக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது.