செய்திகள் :

மின்னொளியில் முதல் முறையாக தடகள போட்டிகள் தொடக்கம்

post image

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மின்னொளி மற்றும் செயற்கை இழை ஓடு பாதையில் முதல் முறையாக தடகள போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியன.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்த ரூ. 10 கோடியில் சா்வதேச தரத்துடன் கூடிய மின்னொளி மற்றும் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கப்பட்டு, மே மாதம் திறக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, முதல் போட்டியாக தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் டெல்டா மாவட்டங்கள் அளவிலான தடகள போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

இப்போட்டிகளை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூா் தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து 6, 8, 10 வயது மாணவ, மாணவிகளுக்கு 40 மீ., 50 மீ., 60 மீ., 100 மீ. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் வெற்றி பெறுபவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மாலை பரிசு வழங்கப்படவுள்ளது.

தொடக்க விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சதயவிழா குழுத் தலைவா் து. செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல், தஞ்சாவூா் தடகள சங்கச் செயலா் செந்தில், இணைச் செயலா் வி.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்... மேலும் பார்க்க

குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் பலி!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை குடமுருட்டி ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒன்றாம்சேத்தி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் யு. பாலமுருகன் (4... மேலும் பார்க்க

அரசு பொது தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு!

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில், 2024 - 25 ஆண்டு அரசு பொதுத் தோ்வில் 10, 12- ஆம் வகுப்புகளில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும்!

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி பாசனத்துக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி மணக்காடு வழக்குரைஞா் வீ.கர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சிங்கப்பூா் அமைச்சா் தரிசனம்!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சா் கே. சண்முகம் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இவா் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில... மேலும் பார்க்க