செய்திகள் :

தொடர் பாலின துன்புறுத்தல்; தாலிபன் தலைவர்களுக்கு கைது வாரண்ட்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

post image

ப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாலிபன்கள் துன்புறுத்துவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதியான அப்துல் ஹக்கீம் ஹக்கானிக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

தாலிபான் ஆட்சியில் பெண்கள்
தாலிபான் ஆட்சியில் பெண்கள்

ஆகஸ்ட் 2021 முதல், சுமார் நான்கு ஆண்டுகளாக தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பல கொடுமையான நிபந்தனைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் விளைவாக, சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடக்கநிலை கல்விக்கு மேலான கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது மற்றும் பெண்கள் வேலைக்கு செல்ல தடை அமல்படுத்தப்பட்டது. பூங்கா போன்ற பிற பொது இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதியும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பெண்களுக்கான அடிப்படை சுதந்திரமே அங்கு பெரும் கேள்விக்குறியாய் போனது.

தாலிபன்களின் பாலின துன்புறுத்தல் செயல்பாடுகளை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் ஆன்மிக தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதியான அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 'தாலிபன்கள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்துள்ளனர். ஆனால், குறிப்பாக பெண் பாலினத்தை குறிவைத்து அவர்களது அடிப்படையான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பறித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறது.

தாலிபன் ஆட்சியில் பெண்கள்
தாலிபன் ஆட்சியில் பெண்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "நாங்கள் எந்த சர்வதேச நீதிமன்றத்தையும் அங்கீகரிக்கவில்லை என்பதால் எந்த சர்வதேச நீதிமன்றத்துக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை" எனக் கூறினார். தவிர, இந்த கைது வாரண்ட் இஸ்லாம் மதத்திற்கு எதிரான விரோதப்போக்கின் எடுத்துக்காட்டு என கூறி தாலிபன்கள் சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையிலான தாலிபன்களது துன்புறுத்தலை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து நேரடியாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியுமா?

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் பெலிண்டா மார்க்ஸ் எ... மேலும் பார்க்க

"நாம் உலகின் குழந்தைகள்" - குடும்பப் பின்னணியை அறிய DNA பரிசோதனை; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பிறந்து, போர்த்துகீசிய பெற்றோரால் வளர்க்கப்பட்ட கேட் என்ற பெண், சிறிய வயதிலிருந்தே தன்னைக் குடும்பத்தில் ஒரு வித்தியாசமானவராக உணர்ந்திருக்கிறார்.@juust_kate என TikTok-இல் அழைக்கப்படும் கேட்... மேலும் பார்க்க

பீகார்: நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் பலியான சோகம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தயாராகாத சாலைக்குக் கட்டணம்" - சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய ராஜ்தாக்கரே கட்சி

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மராத்தி பிரச்னையில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்குத் ... மேலும் பார்க்க

சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் பு... மேலும் பார்க்க

மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அ... மேலும் பார்க்க