லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 போ் உயிரிழப்பு: ஈரான்
கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனா்.
காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவா்கள் எச்சரித்தனா். இருந்தாலும், ராணுவ ரீதியிலான இழப்பு விவரங்களை ஈரான் இதுவரை வெளியிடவில்லை.
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 436 பேரும், பாதுகாப்புப் படையினா் 435 பேரும் உயிரிழந்ததாக வாஷிங்டனில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.