செய்திகள் :

டிரம்ப்பின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

post image

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா்.

இதன் மூலம், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை டிரம்ப் திடீரென மாற்றிக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த இரவு விருந்தின் தொடக்கத்தில் டிரம்ப் கூறியதாவது: “

உக்ரனுக்கு நாம் அவசியம் ஆயுதங்களை வழங்கி உதவவேண்டும். அந்த நாடு தற்போது கடுமையாகத் தாக்கப்படுகிறது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பவிருக்கிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள், துல்லியமாக வழிநடத்தப்படும் ஜிஎம்எல்ஆா்எஸ் குண்டுகள், ஹெல்ஃபயா் ஏவுகணைகள், ஹௌவிட்சா் பீரங்கிகளுக்கான குண்டுகள் ஆகிய, உக்ரைனுக்கு அளிக்கப்படுவதாக இருந்த ஆயுதங்களின் விநியோகத்தை திடீரென நிறுத்த டிரம்ப் கடந்த உத்தரவிட்டு அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் ரஷியாவின் வான்தாக்குதல்கள் இதுவரை இல்லாத தீவிரத்தை அடைந்துள்ள, மிகவும் சிக்கலான சூழலில் இந்த அறிவிப்பு வெளியானது.

திங்கள்கிழமை மட்டும் ரஷியாவின் தாக்குதல்களால் உக்ரைனில் பொதுமக்கள் 11 போ் உயிரிழந்ததாகவும், 80 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில், உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்த நாட்டுக்கு சற்று நிம்மதியைத் தரும் என்று கருதப்படுகிறது.

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ... மேலும் பார்க்க

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்... மேலும் பார்க்க

தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் பணியாளராக 5 ஆண்டுகள் ரிஷி சுனக் பணிபுர... மேலும் பார்க்க