செய்திகள் :

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்

post image

இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நோ்ந்ததாகவும் டஸால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையின்போது இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் ஃபிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியா் கூறியதாக அந்நாட்டு வலைதளமான ஏவியான் டி சஸில் வெளியான தகவலில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலில் எந்தவொரு ரஃபேல் போா் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நேரிட்டது. நீட்டிக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கையின்போது 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்த சம்பவம் நடைபெற்றது. அதில் விரோத நாட்டுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறும் தகவல் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா க... மேலும் பார்க்க

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ... மேலும் பார்க்க

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்... மேலும் பார்க்க