செய்திகள் :

"ரோம் எரிந்தபோது ஃபிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல `கூலி' படத்துக்கு..." - ஸ்டாலினை சாடிய கௌதமி

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்ததற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின்மீது அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றன.

இந்த நிலையில், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி, "கூலி படம் பார்க்க நேரமிருக்கிறது, மக்களின் கோரிக்கைகளை கேட்க நேரமில்லையா?" என முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது - கூலி படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்கள் கைது - கூலி படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌதமி, "தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும், தூய்மைப் பணியாளர்களை, நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்திருப்பது, ஸ்டாலின் குண்டர் அரசின் அராஜகத்தின் உச்சம்.

ஸ்டாலின் அவர்களே, ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததைப் போல, உங்கள் உறவினர் கலாநிதிமாறனின் கூலி திரைப்படத்தைப் பார்த்து அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமிருக்கிறதா? உங்களை வாக்களித்து முதல்வராக்கிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க நேரமில்லையா?

நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கும் பொதுமக்களுக்கு இதுதான் கதியா?

வாக்கு கேட்டு, அதே மக்களை மீண்டும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா?

காவல்துறையை வைத்து, நீங்கள் நிகழ்த்தும் அயோக்கியத்தனங்களை உடனடியாக நிறுத்துங்கள்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.

புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கிறது அரசு ?

தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கும் புதுச்சேரியில், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: `அரசின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது..!' - தங்கம் தென்னரசு

செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள... மேலும் பார்க்க

காங்கிரஸ்: "முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும்" - செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களை, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நேற்றிரவு கைது செய்தது காவல்துறை. தமிழக அரசின் இந்த நடாவடிக்கைக்கு பெருமளவில்... மேலும் பார்க்க

"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM பெ.சண்முகம் கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்யப... மேலும் பார்க்க

"கம்யூனிசம் பேச கூச்சமாக இல்லையா? தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள்?" - சீமான்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்யப... மேலும் பார்க்க

`பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.840 கோடி; RTI மட்டும் இல்லையென்றால்.!’ - சுதர்சன நாச்சியப்பன்

மதுரையில் அரசியல் கட்சிகளின் மாநாடு, சாதி மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்ததை பார்த்த நமக்கு, 'தகவல் பெறும் உரிமைச் சட்ட' ஆர்வலர்கள் நடத்திய மாநாட்டுக்கு ஆர்வலர்கள் திரண்டு வந்ததது ... மேலும் பார்க்க