செய்திகள் :

'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்

post image

கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.

இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை'யை நிறுவியுள்ளது டாடா குழுமம்.

இழப்பீடு

இந்த அறக்கட்டளை மூலம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக தரப்பட உள்ளது. மேலும், இந்த விபத்தில் இடிந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதியைக் மீண்டும் கட்டுவதிலும் உதவி செய்து வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து| Ahmedabad Plane Crash
அகமதாபாத் விமான விபத்து| Ahmedabad Plane Crash

இதன் ஒரு பகுதியாக, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 229 பயணிகளில் 147 பயணிகளின் குடும்பத்திற்கும், தரையில் இருந்து இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்திற்கும் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி, இடைக்கால இழப்பீடாக டாடா குழுமம் மேலே குறிப்பிட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இழப்பீடு வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

ரத்தன் டாடா இருந்திருந்தால்...

இந்த விபத்தில் சிக்கிய 65 பேரின் குடும்பத்திற்காக வாதாடும் அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், இழப்பீடு இன்னும் வழங்கப்படாதது குறித்து, "அமெரிக்காவிலும் எங்களுக்கு ரத்தன் டாடாவைப் பற்றி தெரியும்.

அமெரிக்காவில் அவருடைய பணி நெறிமுறைகள், அவர் அவருடைய பணியாளர்களுக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு பற்றி எங்களுக்கு தெரியும்.

அதனால், அவர் இப்போது இருந்திருந்தால், இழப்பீடு கொடுக்க ஏற்படும் தாமதம் நிகழாது என்பது எங்களுக்கு தெரியும்.

அம்மா - மகன்

இந்த விபத்தில் பாதித்த ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். இந்த விபத்தில் இறந்த ஒருவரின் வயதான அம்மா படுக்கையில் இருக்கிறார்.

அவருடைய மருத்துவ செலவுகளுக்கு அவரது மகனின் வருமானத்தை நம்பி தான் இருந்திருக்கிறார். ஆனால், அவரது மகன் இப்போது இறந்துவிட்டார். அவருடைய மருத்துவ செலவுகளைப் பார்த்துகொள்ள பணம் இல்லை. அவர் என்ன செய்ய முடியும்?" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்

இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்ற... மேலும் பார்க்க

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் கா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்நோக்கி...விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேமுத்துலிங்காபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர்மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அ... மேலும் பார்க்க