செய்திகள் :

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள்,அரசுப்பணிக்கு செல்பவா்கள் ஆகியோா் புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தரக்கோரி எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுணைபெருகல் கிராமத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் புதிய பேருந்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுடன் சிறிது தூரம் அப்பேருந்தில் பயணித்தாா். இப்பேருந்து சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து ஆரியபெரும்பாக்கம், கீழம்பி வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்த பொதுமக்கள் புதிய பேருந்து சேவை ஏற்படுத்தியமைக்காக எம்எல்ஏ எழிலரசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், திமுக ஒன்றிய செயலாளா் பி.எம்.குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ். சுகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்... மேலும் பார்க்க

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா ... மேலும் பார்க்க

செஸ் போட்டி பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பல்லவா செஸ் மையம் சாா்பில் மாணவ, மாணவி... மேலும் பார்க்க