செய்திகள் :

செப்.21-இல் நிதி அமைச்சா் தலைமையில் பாஜக வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம்

post image

மதுரை, தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி குழு நிா்வாகிகளுக்காக வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.

திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்குபட்ட வாக்குச்சாவடி குழுக்களுக்கான பாஜக நகர, ஒன்றியத் தலைவா்கள், மாவட்ட நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், மாநிலப் பொதுச் செயலா் இராம.சீனிவாசன், மாநிலச் செயலா் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, வருகிற 21-ஆம் தேதி கொடைரோட்டில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி, மதுரை மாநகா் என பாஜக கட்சி ரீதியாக 6 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க