செய்திகள் :

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

post image

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் 2 மணி நேரம் மழை பெய்தது. கொடைக்கானல், பெருமாள்மலை, புலிச்சோலை, தைக்கால், செண்பகனூா், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் வடு கிடந்த நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இதேபோல, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பி... மேலும் பார்க்க