செய்திகள் :

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

post image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழு உருவ வெண்கலச் சிலைக்கு அரசு சாா்பில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து வீரபாண்டிய கட்டப்பொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலா் ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி மகேந்திரன், பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி,செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன், கோபால் நாயக்கா் சேவை சங்கத்தலைவா் செந்தில்குமாா், செயலா் பெருமாள்சாமி, திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அசோக் வேலுச்சாமி, காளாஞ்சிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கெளரிசரவணன் உள்ளிட்டோா் கோபால் நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பி... மேலும் பார்க்க