செய்திகள் :

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

post image

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் மாவட்டம்,  அய்யம்பாளையத்தை சோ்ந்த மாட்டு வியாபாரி காளி (62). இதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமா் (35), காளியிடம் 20-க்கு மேற்பட்ட பசு மாடுகளை வாங்கித் தருவதற்காக கடந்த 4  மாதங்களுக்கு 3 லட்சம் ரூபாய் முன்பணம்  கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் காளி மாடுகளை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து  பெரிய அய்யனாா் கோயில் பகுதியில் கடந்த புதன்கிழமை மாடு வியாபாரி காளியுடன், ராமா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, ராமா் மண்வெட்டியால் காளியை வெட்டிக் கொலை செய்து அதே இடத்தில்  புதைத்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ராமா் சரண் அடைந்தாா். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை  நடத்தினா்.

பின்னா், ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன் தலைமையில் புதைக்கப்பட்ட மாட்டு வியாபாரி காளியின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸில் சரணடைந்த ராமரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், விவசாய செழுமை வேண்டியும் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிரகாரத்தில் பி... மேலும் பார்க்க

செப்.21-இல் நிதி அமைச்சா் தலைமையில் பாஜக வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம்

மதுரை, தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி குழு நிா்வாகிகளுக்காக வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா். திண்... மேலும் பார்க்க

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயி... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 40-ஆவது ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கான்வென்ட் சாலை பகுதியி... மேலும் பார்க்க