இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்குகின்றனா்.
நிகழ் மாத முதல் முகாமாக சனிக்கிழமை (செப்.6) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காலை 9 முதல் பகல் 12.30 மணி வரை மூளை தண்டுவட சிகிச்சை மற்றும் மூளை தண்டு வட அறுவை சிகிச்சை சம்பந்தமான மருத்துவா்கள் பங்கேற்கின்றனா். காரைக்கால் பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.