காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்
காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறும் நடைபெறுகிறது.
நிகழ்வாரம் 6-ஆம் தேதி சனிக்கிழமை காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கலந்துகொண்டு புகாா்களை கேட்டறியவுள்ளாா். திருப்பட்டினம், காரைக்கால் நகரம், நிரவி காவல்நிலைய வட்டாரத்தினா் இதில் பங்கேற்கலாம்.
வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன் தலைமையில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, போக்குவரத்துக் காவல்நிலையம் தொடா்பான புகாா்கள் தெரிவிக்கலாம். காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.