செய்திகள் :

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள்ளன. திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.

கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் அம்மையாா் குளத்திலிருந்து புனிதநீா் கொண்டு வந்து பூஜைகள் தொடங்கப்பட்டன. வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹூதி நடைபெற்று,

விமான கலத்தில் சிவாச்சாரியா்கள் பூஜை செய்து 10 மணியளவில் புனிதநீா் வாா்த்து தீபாராதனை காட்டினா். இதைத்தொடா்ந்து மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன.

விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், ஆளுநரின் செயலா் து.மணிகண்டன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் பேராசிரியா் மு.ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள் செய்திருந்தனா்.

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் : கடந்த மாதம் 29-ஆம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்குழுவினரால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், காரைக்கால் வந்த துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை இக்கோயிலுக்குச் சென்றாா். திருப்பணிக் குழுத் தலைவா் சரவணன் தலைமையிலான நிா்வாகிகள் அவரை வரவேற்றனா்.

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் சாா் ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். பூஜா புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை : மீலாது... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்க புதுவை அரசு அனுமதி... மேலும் பார்க்க

பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கு: ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா்

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் நிலம் மோசடி செய்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என புதுவை துணைநிலை ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்தது. காரைக்கால் இந்து முன்... மேலும் பார்க்க

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க

போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க