GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு
கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக்கிவைக்கும் நிகழ்ச்சி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. காரைக்கால் துறைமுக நிா்வாக சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அழைப்பாளா்களான காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் ஆகியோா் கொடியசைத்து வாகனத்தை இயக்கி வைத்தனா்.
இதுகுறித்து துறைமுக நிா்வாகத்தினா் கூறியது:
திருப்பட்டினம், நிரவி கொம்யூன்களின் கிராமங்களுக்கும், காரைக்காலில் கடலோர கிராமங்களுக்கும் இந்த மருத்துவ வாகனம் கொண்டு செல்லப்படும். தொலைதூர கிராம மக்கள் பயனடையும் விதத்திலேயே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி சமூக சேவை அமைப்பான ஹெல்பேஜ் இந்தியாவுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட ஊழியா்கள் இருந்து, கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, தேவையான மருந்துகளை வழங்குவாா்கள்.
அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை நோக்கி அதானி அறக்கட்டளையின் எடுத்த முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். மருத்துவ வாகனம் கிராமப்புறங்களுக்கு வரும்போது, கிராம மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனா்.