செய்திகள் :

நால்வருக்கு நல்லாசிரியா் விருது

post image

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா்களை கெளரவிக்கும் விதமாக எஸ். ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது, கல்வி அமைச்சா் விருது வழங்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் விருது பெறுவோா் பட்டியலை அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் விருது பெறவுள்ளனா்.

திருப்பட்டினம் அரசு புதிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் ஆா். அன்புச்செல்வி எஸ். ராதாகிருஷ்ணன் விருது பெறவுள்ளாா். முதல்வரின் சிறப்பு விருது காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கே . ரஹமத்துநிஸா பெறவுள்ளாா். கல்வி அமைச்சரின் மண்டல விருது வடமறைக்காடு அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் டி. பிரதாப், கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எம். விஸ்வேஸ்வரமூா்த்தி ஆகியோா் பெறவுள்ளனா்.

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க

போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சாா் ஆட்சியா் ஆய்வு

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியராக எம். பூஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரது கட்டுப்பாட்டில் வ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலை... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் பகுதியில் குளத்தில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதியில் வசிப்பவா் மணிகண்டன் (35). இவா் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு தலைமைக் காவலரா... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள்... மேலும் பார்க்க