செய்திகள் :

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

post image

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோகம்பா தாலுகாவிலுள்ள ரஞ்சித்நகர் பகுதியில் செயல்பட்டுவரும் குஜராத் ஃபுளூரோ ரசாயன ஆலையில், நச்சுத்தன்மை வாய்ந்த வாயு இன்று வெளியேறியது.

முன்னதாக ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என்றும் நச்சு வாயு மட்டுமே வெளியேறியுள்ளதாகவும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரையிலான நேரத்தில் குளிரூட்டிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆர்-32 என்ற நச்சு வாயு, பழுப்பில் இருந்து கசிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆலைக்குள் நடந்த இந்த சம்பவத்தால், தொழிலாளர்கள் பலருக்கு குமட்டல், தலைசுற்றல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. நிறுவனத்தின் உள் சுகாதாரக் குழு உடனடியாக மாற்று மருந்துகளை வழங்கி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது.

அதே நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்கள் பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆலை நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டபோதிலும், ஒரு தொழிலாளி வாயுக் கசிவால் உயிரிழந்ததாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தில்லியில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

One dead, 12 hospitalised after toxic gas leak at Gujarat Fluoro Chemical Company

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது. முன்னதாக, நா... மேலும் பார்க்க

ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.2,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்திய தொழில், வா்த்தக சம்ம... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க