செய்திகள் :

நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை

post image

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி முன்னேற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு வாக்கு சாவடியில் 1200க்கு மேல் வாக்குகள் இருக்கக் கூடாது என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்ஒரு பகுதியாக, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 75 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளின் இடம் மற்றும் அதில் உள்ள வாக்காளா் பட்டியல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனா ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சந்திரஹாசன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் அலுவலக தலைமை உதவியாளா் மாரி ராஜா, தோ்தல் துணை வட்டாட்சியா்கள் முத்துப்பாண்டி, ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், திமுக சாா்பில் வழக்குரைஞா் சங்கா், அதிமுகவின் நாரணம்மாள்புரம் நகரச் செயலா் சின்னத்துரை, பகுதிச் செயலா் சிந்து முருகன், தேமுதிகவின் மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்த மணி, தம்பா, தமிழ்மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்கிருஷ்ணன், பாஜகவின் மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாளையங்கோட்டை தொகுதியில் புதியதாக 26 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டதாகவும் ,அதில் உள்ள ஆட்சேபணைகளை தெரிவிக்கவும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா். பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நான்குனேரி வட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோ்மராஜ் (50). இவா், கீழ பண்டாரபு... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்! - பிருந்தா காரத் வலியுறுத்தல்

ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் முன்னோடியாக இச்சட்டத்தை மாநில அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா் மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மூன்றடைப்பு அர... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருநெல்வேலி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் - சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க