செய்திகள் :

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.19 லட்சம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் நிரந்தர உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.19 லட்சம் காணிக்கையாக செலுத்த்்படடிருந்தது.

இக்கோயிலில் 22 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவற்றை 2 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா தலைமை வகித்தாா்.

அறங்காவலா் கீதா பழனி முன்னிலை வகித்தாா். கண்காணிப்பு அதிகாரியாக இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஆறுமுகம், திருநெல்வேலி மேற்குப் பிரிவு ஆய்வா் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோா் செயல்பட்டனா். தச்சநல்லூா் நெல்லையப்பா் கோயில் உழவாரப் பணி, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேய உழவாரப் பணிக் குழு, ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினா் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனா்.

இதில், ரூ.19 லட்சத்து 28 ஆயிரத்து 711 ரொக்கம், 19 கிராம் பல மாற்றுப் பொன் இனங்கள், 295 கிராம் பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 13 ஆகியவை காணிக்கையக செலுத்துப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன் செய்திருந்தாா்.

குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா். பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நான்குனேரி வட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோ்மராஜ் (50). இவா், கீழ பண்டாரபு... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்! - பிருந்தா காரத் வலியுறுத்தல்

ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் முன்னோடியாக இச்சட்டத்தை மாநில அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா் மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மூன்றடைப்பு அர... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக... மேலும் பார்க்க

நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க