செய்திகள் :

லாடபுரத்தில் ரூ.6.5 கோடியில் திட்டப் பணிகள் அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைத்தாா்!

post image

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் மற்றும் மேலப்புலியூா் ஊராட்சியில் ரூ. 6.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை அடிக்கல் நாட்டி வைத்து, பயணியா் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட லாடபுரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, அயோத்தி தாசா் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, ரூ. 5 கோடி மதிப்பீட்டில் லாடபுரம் பிரிவுச் சாலை மேம்பாடு மற்றும் பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 5.98 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மேலப்புலியூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்பு பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருண... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

பெரம்பலூா் அருகே வயலுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை காலை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள நெடுவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கேஸ்வரன் மனைவி ர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 30 காவலா்களுக்குப் பரிசு!

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவலா்களைப் பாராட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 1 பவுன் நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்திருடப்பட்டது புதன்கிழமை காலையில் தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சுதா (32). வாடகை வீட்டில் வசி... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து சாலை மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து, அப்பகுதி மொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ப... மேலும் பார்க்க