செய்திகள் :

Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

post image

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் சீனா, ரஷ்யா அதிபர்களின் சந்திப்பை விமர்சித்துப் பேசிவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

ட்ரம்ப், "நான் எப்போதும் மோடியின் நல்ல நண்பராக இருப்பேன். ஆனால், இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்யும் சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை." என்று பேசியிருந்தார்

இதற்கிடையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கப் பயணத்தை மோடி தவிர்ப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

https://truthsocial.com/@realDonaldTrump/posts/115176472700835865

இந்நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்,

"இந்தியாவும் அமெரிக்காவும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வரும் வாரங்களில் எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளும் நல்ல முடிவுகள் எடுப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!" என்று தனது 'ட்ரூத் (Truth)' சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மயிலாடுதுறை: சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; குடிநீருக்கு அல்லாடும் மக்கள்.. நிலை மாறுமா?

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு... மேலும் பார்க்க

``சிறையில் உயிர்வாழ முடியாது; விஷம் கொடுங்கள்'' - நடிகர் தர்ஷன் வாதம்; நீதிபதி கொடுத்த உத்தரவு

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில... மேலும் பார்க்க

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 'அவ... மேலும் பார்க்க

``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராமன் பதில்

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவுஇது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். "இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க