நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் சீனா, ரஷ்யா அதிபர்களின் சந்திப்பை விமர்சித்துப் பேசிவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

ட்ரம்ப், "நான் எப்போதும் மோடியின் நல்ல நண்பராக இருப்பேன். ஆனால், இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்யும் சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை." என்று பேசியிருந்தார்
இதற்கிடையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கப் பயணத்தை மோடி தவிர்ப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்,
"இந்தியாவும் அமெரிக்காவும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வரும் வாரங்களில் எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளும் நல்ல முடிவுகள் எடுப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!" என்று தனது 'ட்ரூத் (Truth)' சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs