IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
82.4 கி.மீ நீளமுள்ள மோகாமா-முங்கர் சாலையானது HAM (ஹாம்) அடிப்படையில் கட்டப்படும் என்றார் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்த சாலையானது, பாகல்பூருடன் இணைக்கும் வகையில், மோகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு இணைப்பை வழங்கும்.
இதையும் படிக்க: வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!