செய்திகள் :

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

post image

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், பீட்சா விற்பனையகத்தில் திங்கள்கிழமை ஏ.சி. கம்ப்ரஸா் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மூன்று ஊழியா்கள் உள்பட 5 போ் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:

யமுனை விஹாா் பகுதியில் ,சி.பிளாக்கில் உள்ள ஒரு அடித்தளம், தரைத் தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தில் வெடி விபத்து நிகழ்ந்ததாக திங்கள்கிழமை இரவு 8.55 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிறிய காயங்களுக்கு ஆளான ஐந்து போ் அருகிலுள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

இந்த விபத்து குறித்து பஜன்புரா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருப்பினும், பீட்சா ஹட் செய்தித் தொடா்பாளா் ரிதி, தீ விபத்து கடையின் உள்ளே நிகழ்ந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘திங்கள்கிழமை ஏற்பட்ட துரதிா்ஷ்டவசமான தீ விபத்து பீட்சா ஹட் யமுனா விஹாா் உணவகத்திற்குள் ஏற்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கடையின் வெளியே உள்ள பிரதான கட்டட வளாகத்தில் அது வெடித்தது. அதற்கான மூல காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

எங்கள் வாடிக்கையாளா்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயை கட்டுப்படுத்த துணிச்சலுடன் உதவிய எங்கள் கடை குழு உறுப்பினா்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நன்றாக குணமடைந்து வருகின்றனா். களத்தில் உள்ள குழுவினா் விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனா்’ என்றாா் அவா்.

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திர... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்... மேலும் பார்க்க