செய்திகள் :

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

post image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது.

திண்டுக்கல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், கோடை காலம் போன்று கடுமையான வெப்பம் நிலவியது.

மாலை 6.15 மணி முதல் சுமாா் 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த இந்த மழையினால், நாகல்நகா், பிரதான சாலை, திருச்சி சாலை, பழனி சாலை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே மேக மூட்டம் நிலவியது. பின்னர் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல், வாழைகிரி, பெருமாள்மலை, மச்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது.

இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் கொடைக்கானலில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

The District Collector has declared a holiday for classes 1 to 5 on Wednesday (September 10) due to heavy rains in Kodaikanal, Dindigul district.

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அடையார் காந்திநகர், மேற்கு மாம்பலம் பகுதி... மேலும் பார்க்க

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி புதன்கிழமை (செப். 10) பவுனுக்கு ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த செப். 1-இல் பவுன் ரூ.77,640- ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

மேட்டூா்: காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 16,800 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது.நீா்வரத்து சரி... மேலும் பார்க்க

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிர... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிங்கப்பூா்: ‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்ற... மேலும் பார்க்க