செய்திகள் :

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

post image

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.

2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா வெறும் 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

அதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் சபாநாயகர் என்ற முறையில் நடுநிலைமையாகச் செயல்படாமல் ஆளும் கூட்டணி எம்.பி-க்களுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் குற்றம்சாட்டின.

இத்தகைய சூழலில், கடந்த ஜூலை பிற்பாதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (ஜூலை 21) குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.

இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.

நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டிலிருந்து குடியரசு துணைத் தலைவராகும் மூன்றாவது நபரானார்.

மோடி - சி.பி. ராதாகிருஷ்ணன்
மோடி - சி.பி. ராதாகிருஷ்ணன்

மறுமுனையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

இந்த நிலையில், ராஜினாமாவுக்குப் பிறகு மௌனமாக இருந்த ஜெகதீப் தன்கர் முதல்முறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஜெகதீப் தன்கர் அறிக்கை
ஜெகதீப் தன்கர் அறிக்கை

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அந்த அறிக்கையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த உயரிய பதவிக்கு நீங்கள் வந்தது நமது நாட்டின் பிரதிநிதிகளின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

பொது வாழ்வில் பரந்த அனுபவம் கொண்ட உங்கள் தலைமையின் கீழ், இந்தப் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும் மகிமையையும் பெறும்" என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அமெரிக்கா கண்டனம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செப்டம்பர் 8, 2025 அன்று, ஜெருசலமின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரமோட் சந்திப்பு (Ramot Junction) என்ற இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக... மேலும் பார்க்க

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க

Sudan Gurung: நேபாளத்தில் போராடும் Gen Z-களின் தலைவராகப் பார்க்கப்படும் இவர் யார்?

சமூக வலைத்தளங்கள் முடக்கம்நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது. இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்

தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ப... மேலும் பார்க்க