செய்திகள் :

Pilots: விமானம் ஏறுவதற்கு முன் விமானிகள் பர்ப்யூம் பயன்படுத்தக்கூடாது; காரணம் என்ன தெரியுமா?

post image

இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் உள்ளது.

விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் தோமர் அவ்தேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்து விளக்கியிருந்தார். DGCA (Directorate General of Civil Aviation) விதிகளின் படி, ஒவ்வொரு விமானியும் பறப்பதற்கு முன் breathalyser சோதனை செய்யப்பட வேண்டும். இந்தச் சோதனை, விமானியின் உடலில் மதுபானம் உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது.

மிகச் சிறிய அளவிலான ஆல்கஹால் கூட சுவாசத்தின் மூலம் கண்டறியப்படுவதால், பர்ப்யூம் அல்லது சானிடைசர் போன்றவற்றின் வாசனை கூட சோதனையில் தவறான முடிவுகளை உருவாக்கக்கூடும்.

விமானி
விமானி

இவ்வாறு சோதனையில் சிக்கினால், அந்த விமானி உடனடியாக நீக்கப்படுவார் (grounded). இதனால், திட்டமிட்ட விமானச் சேவை தாமதமடையக்கூடும். மேலும், விதிமுறைகளை மீறியதாகக் கருதி ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, விமானிகள் பறப்பதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் போன்ற ஆல்கஹால் கலந்த பொருட்களைத் தவிர்க்கிறார்கள். சிலர் சோதனை முடிந்த பின்பே இத்தகைய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

பர்ப்யூம் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கங்கள் கூட, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Social Media: ``சிரித்த பிறகாவது சிந்திப்போம்!'' - இமிடேட், மீம்ஸ் தொடர்பான ஆதங்கம்

சுடச்சுட அருமையான தேநீர்... மணம், சுவை, திடம் இப்படி ஒரு தேநீருக்குத் தேவையான அத்தனை குணங்களும் நிரம்பப்பெற்ற ஒரு தேநீரில், ஆளுக்குக் கொஞ்சம் நீரை ஊற்றினால்... எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ, அதற்குப் பயன... மேலும் பார்க்க

காலையில் கனவுகள் ஏன் வருகின்றன தெரியுமா? - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் நாம் காணும் கனவுகள், நம் மனதின் ஆழமாக இருக்கும் விஷயங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காலையில் கனவுகள் ஏன் தோன்றுகின்றன, ஏன் சிலர் இவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர், சிலர் ஏன் மறந்துவிடுகின்... மேலும் பார்க்க

'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பல முக்கிய தருணங்களில் எனக்குத் துணையாய் இருந்த நகரம் - சென்னையை ரசிக்கும் காதலி #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

காதல், திருமணம், விவாகரத்து, மறுமணம் எனப் பெண்கள் தங்களது உறவுசார் முடிவுகளைத் தாங்களே எடுத்தால், கொந்தளிக்கும் குடும்பங்களும், சமூக அமைப்புகளும்தான் இங்கு வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆண... மேலும் பார்க்க

ஹை ஹீல்ஸ் அணிவதால் மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துமா? - தீர்வு கண்டறிந்த நியூரோ சயன்டிஸ்ட்!

“ஹை ஹீல்ஸ்” என்றால் அழகு, ஸ்டைல், கவர்ச்சி என்று பெண்கள் அதனை வாங்கி அணிகிறார்கள். அதே சமயம் இதனால் கால் வலி, சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன என்பதும் நிதர்தனம். இதற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார் நியூயார்க... மேலும் பார்க்க