செய்திகள் :

இந்திய - நேபாள எல்லையில் உச்சகட்ட கண்காணிப்பு! எல்லையில் நுழைய கட்டுப்பாடு

post image

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

இந்திய - நேபாள எல்லைப் பகுதியில் சாஸ்த்ரா எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், நேபாளத்தின் பதற்றம் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிடாமல் தடுக்கும் வகையில், எல்லைக்குள் நுழைபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நேபாளம் இடையே 1,751 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லைப் பகிரப்பட்டு வருகிறது. இதில் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், சிக்கிம், மேற்கு வங்கம் மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்களிலிருந்து நேபாள எல்லைக்குள் மக்களும் சரக்குகளும் இடம்பெயர்வதற்கு புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், நேபாள மக்கள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியர்கள் மட்டுமே நேபாளத்திலிருந்து இந்தியா வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் யாரும் நேபாளம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில், சமூக வலைத்தளங்களுக்கான தடையை எதிர்த்து மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் போராட்டம் ஓயவில்லை. செவ்வாயன்று அது கலவரமாக மாறியது. சுமார் 22 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், இரண்டு நாள்களாக போர்க்களமாக மாறியிருந்த நேபாளத்தில் இன்று அமைதி திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இ... மேலும் பார்க்க

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகைய... மேலும் பார்க்க

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து... மேலும் பார்க்க

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க