செய்திகள் :

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

post image

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து விடியோ அழைப்பின் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதியிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கூடுதல் போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறையில் வழங்கக் கோரி தர்ஷன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் விசாரித்த நிலையில், தர்ஷன் விடியோ அழைப்பின் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ”தன்னை கடந்த 30 நாள்களாக சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிக்கவில்லை, எனது உடைகள் துர்நாற்றம் வீசுகிறது, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்” என்று நீதிபதியிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறையின் விதிமுறைக்குள்பட்டு கூடுதல் போர்வை மற்றும் தலையணை வழங்க சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சிறை வளாகத்துக்குள் நடப்பதற்கு தர்ஷனுக்கு அனுமதி வழங்க வேண்டும், உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுக அனுமதிக்க வேண்டும் மற்றும் அவரின் பணத்தின் சிறை கேண்டீனில் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, வேறு சிறைச்சாலைக்கு மாற்றக் கோரிய தர்ஷன் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

Actor Darshan has said that he is not even allowed to see sunlight in prison, so instead, give me poison.

இதையும் படிக்க : உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதள ... மேலும் பார்க்க