செய்திகள் :

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

post image

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காஸியாபாத்தைச் சேர்ந்த மாணி பவார் (29) என்ற பெண், தனது கணவருடன் மஹிந்திரா வாகன விற்பனையகத்துக்கு வந்தார். ரூ.27 லட்சம் மதிப்புள்ள தார் வகை ஜீப்பை வாங்கிய அவர், டயர்களுக்கு அடியில் எலுமிச்சையை வைத்து பூஜித்து வாகனத்தை இயக்க முற்பட்டார்.

ஆனால், அது மோசமான விபத்தில் முடிந்தது. வாகன விற்பனையகத்தின் முதல் மாடியில் நிறுத்தப்பட்டிருந்த தார் வாகனத்தை இயக்கிய அவர், முதல் மாடியின் கண்ணாடிச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது.

நல்வாய்ப்பாக, தார் வாகனத்தில் இருந்த காற்றுப் பைகள் மேலெழும்பி, மாணி பவார், அவரது கணவர், மற்றும் கடையின் விற்பனையாளர் விகாஸ் ஆகியோரைக் காப்பாற்றியது.

தலைகீழாகக் கவிழ்ந்த வாகனத்துக்குள் இருந்து மூவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்தபோது, அதிர்ஷ்டவசமாக, அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் உயிர்பலி ஏற்பட்டிருக்கும்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பலரும், தங்களது செல்போனில் இந்த காட்சியை படமெடுத்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடையின் கீழ் தளத்தில், தார் வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

A video of a woman trying to climb on a lemon and then tossing it from the first floor like a cockroach is going viral on social media.

இதையும் படிக்க... சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க