செய்திகள் :

``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்

post image

தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் பிரேமலதா பேசியதாவது, "விஜயகாந்தின் கனவு, லட்சியம் தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்பது தான்.

அவரின் கனவு, லட்சியம், ஜெயிக்க வேண்டும். தே.மு.தி.க-வில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும், 2026 தேர்தலில் ஈகோ இல்லாமல் உழைக்க வேண்டும்.

பிரேமலதா
பிரேமலதா

தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை, தே.மு.தி.க அமைக்கிறது.

நல்ல வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். நிர்வாகிகள் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ எத்தனை கிடைக்கிறதோ அது வரட்டும்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் நமது கட்சி சார்பாகப் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறும் போது, ஆல விருட்சம் போல நமது கட்சி தமிழகம் முழுவதும் வேர் ஊன்றி, கவுன்சிலர், சேர்மனாக வர வேண்டும் என்பதுதான் நமது கனவு.

அரசியல் கெத்து

கேப்டனை நம்பி, கட்சியை நம்பி வந்த உங்களை இப்படியே நிர்வாகிகளாக நான் எத்தனை நாள் பார்ப்பது.

உங்களை எல்லாம் சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர் என உங்கள் காரில் போர்டு போட்டு, கெத்தாக வரவேண்டும்.

அரசாங்க பதவி என வரும்போதுதான் அரசியல் அமைப்புக்கே ஒரு கெத்து. வரும் தேர்தலில் கூட்டணியைக் குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் பூத் கமிட்டியை முறையாக அமைத்தால் போதும்.

அப்புறம் பாருங்கள், வரும் 2026 தேர்தலில் நாம் ஒரு மேஜிக் பண்ண போறோம். அந்த மேஜிக் உங்கள் எல்லாரையும் வெற்றிபெறச் செய்யப் போகிறது" என்றார்.

பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி

பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில், கூட்டணி குறித்து மிகத் தெளிவான அறிவிப்பு வரும்.

ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது.

தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.

தமிழகத்திலும் வாக்குத் திருட்டு

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும். வாக்குத் திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த முறைகேட்டைத் தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதற்கு நீதியரசர்கள் துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம் என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க

Sudan Gurung: நேபாளத்தில் போராடும் Gen Z-களின் தலைவராகப் பார்க்கப்படும் இவர் யார்?

சமூக வலைத்தளங்கள் முடக்கம்நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது. இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர... மேலும் பார்க்க

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியா... மேலும் பார்க்க

Nepal: போராட்டக்காரர்கள் தீவைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி - என்ன நடக்கிறது அங்கே?

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலு... மேலும் பார்க்க