செய்திகள் :

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

post image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் வெளியானதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வண்ணம் பூசும் பணியின்போது எதிர்பாராத விதமாக 7 மீட்டர் உயரத்தில் இருந்து சுத்தியல் ஒன்று கண்ணாடி பாலத்தின் 6-வது கண்ணாடியில் விழுந்ததாகவும், அதில் கீறல் ஏற்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை நிறுவனம் மூலம் ஒப்பந்தம்போடப்பட்டு கண்ணாடி தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த 1-ம் தேதி கண்ணாடி வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி அகற்றப்பட்டு, புதிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு 17 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அதன்மீது நடந்து சென்று கண்டுகளித்துள்ளனர். கடந்த மாதம் 16-ம் தேதி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பின்னரும் ஒருலட்சம் சுற்றுலா பயணிகள் அதன்மீது நடந்து சென்றனர். அப்போது எந்த பிரச்னையும் இல்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா

கண்ணாடி பாலத்தின் 6-வது கண்ணாடியில் சிறிய கீறல் ஏற்பட்ட நிலையில் அந்த கண்ணாடி அகற்றப்பட்டு புதிய கண்ணாடி தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக பொருத்தப்பட்ட கண்ணாடி மீது நாளை (செப்.10) முதல் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம். கண்ணாடி பாலம் மிகவும் உறுத்தித்தன்மையுடன் இருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.]

இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் இணைய தயார்'- சொல்கிறார் டி.டி.வி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜீயரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியா... மேலும் பார்க்க

Nepal: போராட்டக்காரர்கள் தீவைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி - என்ன நடக்கிறது அங்கே?

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலு... மேலும் பார்க்க

Vice President Election: தமிழகத்திலிருந்து 3-வது துணை ஜனாதிபதி; வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

துணை குடியரசு தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று(... மேலும் பார்க்க

"காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை என 'சாக்கு' சொல்லக் கூடாது" - விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

இந்தியா டுடே பத்திரிகையின் நேர்காணலில், "அதிமுகவுக்கு அட்வைஸ் வழங்க மாட்டோம், அடுத்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என வெளியில் இருந்து கூறுவது சரியானது அல்ல" என்று பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: 5 பேர் உயிரிழப்புக்குக் காரணம் குடிநீரா? - மருத்துவமனையில் தஞ்சமடையும் மக்கள்!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக, கடந்த சில மாதங்களாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி கோவிந... மேலும் பார்க்க