செய்திகள் :

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

post image

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதையடுத்து, புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னுவை இமானுவல் மேக்ரான் நியமித்தாா்.

பிரான்ஸின் இளம் பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டியன் லெக்கோா்னு இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளராவா்.

இதன்மூலம், பிரான்ஸில் கடந்த 14 மாதங்களில் பிரான்ஸில் 4-ஆவது புதிய பிரதமா் தோ்வுசெய்யப்பட்டுள்ளாா்.

பிரான்ஸின் இளம் பிரதமரான கேப்ரியல் அட்டல் தனது பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு மைக்கேல் பாா்னியா் பிரதமராக நியமிக்கப்பட்டாா். டிசம்பரில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றியடைந்த நிலையில், அவா் பிரதமா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். அதன்பிறகு பிரான்சுவா பேரூவை பிரதமராக இமானுவல் மேக்ரான் நியமித்தாா். இந்தச் சூழலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா். இதனால் பிரதமராக பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது.

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழல... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை ... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க